கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி பலி

மாமல்லபுரம்: சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சமதுவின் மகன் சையது முகமது (17). சென்னையில், ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த, 2 நாட்களுக்கு முன்பு சையது முகமது மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கம் பகுதியில் உள்ள அரபிக் இன்ஸ்டியூட்டுக்கு, அரபிக் மொழி கற்றுக் கொள்ள செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு நண்பர்களுடன் வந்துள்ளார். பின்னர், நேற்று நண்பர்களுடன் கூத்தவாக்கம் கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது, திடீரென கிணற்றில் தவறி விழுந்த சையது முகமது நீச்சல் தெரியாததால் நண்பர்கள் கண் முன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். தகவலறிந்த, மாமல்லபுரம் சட்டம் ஒழுங்கு எஸ்ஐ திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு வந்து, செல்போன் மூலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மாமல்லபுரம் முதன்மை தீயணைப்பு வீரர்கள் வெங்கட கிருஷ்ணன், ரமேஷ் பாபு ஆகியோர் கொண்ட 5 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: