முதல் அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேத்தை வீழத்தி முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது. 2வது அரையிறுதியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதையடுத்து, இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கும் பைனலில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.
இது வரை நடந்த 8 ஆசிய கோப்பையின் பைனலிலும் விளையாடி உள்ள இந்தியா, ஒரே முறை மட்டும் வங்கதேசத்திடம் கோப்பையை பறிகொடுத்தது. எஞ்சிய 7 கோப்பைகளையும் இந்தியாவே வென்றுள்ளது. இலங்கை அணி 5 முறை பைனலில் இந்தியாவிடம் தோற்று 2வது இடத்தையே பிடித்த நிலையில், இன்று 6வது முறையாக மோதுகிறது. இந்தியா 8வது முறையாகவும், இலங்கை அணி முதல் முறையாகவும் ஆசிய கோப்பையை வெல்லும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால், பைனலில் அனல் பறப்பது உறுதி.
நேருக்கு நேர்
* இந்தியா – இலங்கை இதுவரை 22 முறை மோதியுள்ளதில், இந்தியா 18-4 என முன்னிலை வகிக்கிறது.
* அதிகபட்சமாக இந்தியா 168, இலங்கை 155 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக இந்தியா 71, இலங்கை 49 ரன் எடுத்துள்ளன.
* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
The post இறுதியில் இன்று இந்தியா இலங்கை மோதல்: மகளிர் ஆசிய கோப்பை டி20 பிற்பகல் 3.00 மணிக்கு தொடக்கம் appeared first on Dinakaran.