* ‘யாஷஸ்வி ஜெய்ஸ்வால் திறமையான இளம் வீரர். அவரது சிறப்பான ஆட்டம் எனக்கு வியப்பளிக்கவில்லை. ஏனென்றால், ஜெய்ஸ்வாலின் திறமை அவரது ஆட்டத்தில் வெளிப்படுகிறது. ஆனாலும், அதில் அவர் மகிழ்ச்சி அடையவில்லை. இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார். இந்த ஆர்வம் நீடிக்க வேண்டும். இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதுடன் அதிரடியாக விளையாடுவது அணிக்கும் சாதகமாக உள்ளது’ என்று கேப்டன் ரோகித் பாராட்டியுள்ளார்.
* ஒழுங்கீனமான நடவடிக்கை காரணமாக வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் சண்டிகா ஹதுரசிங்க (56 வயது, இலங்கை) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீசின் ஃபில் சிம்மன்ஸ் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என வங்கதேச கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
* பெங்களூருவில் நேற்று பெய்த கனமழை காரணமாக இந்திய அணி வீரர்களின் வலைப்பயிற்சி முழுமையாக ரத்து செய்யப்பட்டது. * நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த வேகப் பந்துவீச்சாளர் பென் சியர்ஸ் முழங்கால் மூட்டு காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஜேக்கப் டஃபி டெஸ்டில் அறிமுகமாகிறார்.
* ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 20 ஓவரில் 111 ரன் என்ற எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 11.4 ஓவரில் வெறும் 56 ரன்னுக்கு சுருண்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது. கேப்டன் பாத்திமா சனா மட்டும் 21 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர் (4 பேர் டக் அவுட்). அந்த அணி 4 ரன்னுக்கு கடைசி 5 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் தோல்வியால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பும் ஆவியாகிப் போனது.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.