புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்!!

மதுரை: 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து தல்லாகுளம் தபால் நிலையம் வரை வழக்கறிஞர்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். நாகையில் வழக்கறிஞர்கள் கருப்புச் சட்டை அணிந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: