டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கெஜ்ரிவால் கைது குறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கெஜ்ரிவால் கைது குறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அதே வழக்கில் நீதிமன்றத்தில் வைத்தே சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜூலை 12ம் தேதி வரையில், அதாவது 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி கடந்த 29ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் சிபிஐ என்னை கைது செய்து சிறையில் அடைத்தது ஆகியவை அனைத்தும் சட்ட விதிகளுக்கு எதிரானதாகும். எனவே சிபிஐ அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், கெஜ்ரிவால் மனு குறித்து 2 நாட்களில் மருமனு தாக்கல் செய்யவும் 7 நாளில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கெஜ்ரிவால் கைது குறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: