வெள்ளுடை வேந்தர் தியாகராயர் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர் சர்.பிட்டி.தியாகராயர் என்று அவரது 173வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர். அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்கு தூணாக விளங்கிய மக்கள் தொண்டர். காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர். நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வெள்ளுடை வேந்தர் தியாகராயர் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: