பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணனுக்கு போலீசார் வலைவீசி வந்தனர். இந்நிலையில் சிவகாசி அருகே கீழ திருத்தங்கல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் குத்தகைதாரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே ஆலையின் மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது குத்தகைதாரர் முத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5லட்சம் நிதி வழங்கியுள்ளது. உயிரிழந்த 10 பேருக்கு தலா ரூ.5லட்சம் காசோலை, ரூ.50,000 ரொக்கம் ஆலை சார்பில் வழங்கப்பட்டது.
The post சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது appeared first on Dinakaran.