18ம் தேதி மின்தேவை 20,341 மெகாவாட் ஆனது

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின் தேவையில் கடந்த ஏப்.8ம் தேதி 20,125 மெகாவாட் என்ற அளவில் இருந்தது, ஆனால் புதிய உச்சமாக 18ம் தேதி 20,341 மெகாவாட் பதிவானது. அதேபோல மின் பயன்பாட்டில் ஏப்.17ம் தேதி 442.74 பதிவான நிலையில் நேற்று முன்தினம் புதிய உச்சமாக 448.21 மில்லியன் யூனிட் பதிவானது. ஒரேநாளில் 54.7 லட்சம் யூனிட்கள் கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மின்சாரம் தடைபடாமல் இருக்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்றனர்.

The post 18ம் தேதி மின்தேவை 20,341 மெகாவாட் ஆனது appeared first on Dinakaran.

Related Stories: