இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடி மையத்திற்கு நேற்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனைவி கிருத்திகாவுடன் வந்து தனது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை செய்தார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து அதே வாக்குச்சாவடி மையத்தில் வாக்கினை செலுத்தினார். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘என்னுடைய ஜனநாயக கடமையை வாக்களித்து நிறைவேற்றியுள்ளேன். முதலமைச்சர் சொல்வதை போல அனைவரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். 11 மணி அளவில் கிட்டத்தட்ட 18 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் உங்கள் கடமையை செலுத்துங்கள். யார் சரியானவர்கள், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை நீங்கள் இந்த தேர்தல் மூலம் காட்டுங்கள்’’ என்றார்.

The post இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: