யானைகள் தாக்கிய 2 பேர் பரிதாப பலி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மணியக்காரன்கொட்டாய் பகுதிக்கு, நேற்று முன்தினம் காலை ஒற்றை யானை வந்தது. இதை பார்க்க சென்ற தீர்த்தாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(70) என்பவரை துரத்திச் சென்ற யானை, அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே மேடுமுத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி அப்பைய்யா(54), நேற்று காலை தனது விவசாய தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் சுற்றி திரிந்த ஒற்றை யானை, திடீரென அவரை துரத்தி தாக்கியதில் உயிரிழந்தார்.

The post யானைகள் தாக்கிய 2 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: