தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டு விபத்தில் பலி

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மெட்டாலா ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வம். இவரது மனைவி அமுதா(46). இவர் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர் திருச்செங்கோடு அடுத்த எளையம்பாளையம் தனியார் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில், நேற்று முன்தினம் இரவு, பணியை முடித்து விட்டு, நள்ளிரவில் ராசிபுரத்துக்கு டூவீலரில் வந்துள்ளார். பிள்ளாநல்லூர் அடுத்த அணைப்பாளையம் பைபாஸ் கல்லுமடை பகுதியில் வந்தபோது, அவ்வழியாக வந்த மினி லாரி மீது, டூவீலர் நேருக்குநேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அமுதா, பலியானார். தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, அமுதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

The post தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டு விபத்தில் பலி appeared first on Dinakaran.

Related Stories: