தமிழக முதல்வர், அமைச்சருக்கு தி.மு.ராசேந்திரன் எம்எல்ஏ நன்றி

கடையநல்லூர், ஆக.1: தமிழ்நாட்டில் இருந்து கேரளம் மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகத் தடை செய்த தமிழ்நாடு முதலமைச்சர், இயற்கை வளங்கள் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசுக்கும், இதனால் பெரும்பாதிப்பிற்குள்ளான கடையநல்லூர் தொகுதி மக்கள் சார்பிலும்,தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் சார்பிலும் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் துறை அமைச்சர் டாக்டர் பிரபுவை கடையநல்லூர் எம்எல்ஏ தி.மு.ராசேந்திரன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

இத்தடையை நிரந்தரமாக்குமாறும், உள்நாட்டிலேயே முழுமையாக விற்பனை செய்யப்படும் ஜல்லிகள் உள்ளிட்ட கனிமங்களுக்கு கட்டுபடியான விலையை அதன் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களிடம் பேசி நிர்ணயம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

Related Stories: