கர்நாடகாவில் இருந்து அரசு பஸ்சில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்: தப்பிய நபருக்கு வலை

 

ஓசூர், ஆக. 4: கர்நாடகாவில் இருந்து, ஓசூர் வழியாக அரசு பஸ்சில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சாவை ேபாலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில், நேற்று காலை சிப்காட் காவல்நிலைய எஸ்எஸ்ஐ நாகராஜ் மற்றும் காவலர் முருகன் ஆகியோர், கர்நாடகா மாநிலத்திருந்து வரும் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியிலிருந்து சேலத்திற்கு சென்ற தமிழக அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபரின் பையை வாங்க முயன்ற போது, அந்த நபர் பஸ்சிலிருந்து வேகமாக கீழே இறங்கி தலைமறைவானார். இதனையடுத்து, அந்த பையை போலீசார் சோதனை செய்த போது, அதில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து, தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: