ராயக்கோட்டை, ஆக.4: ராயக்கோட்டையில், கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. தமிழக மற்றும் கர்நாடக எல்லையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலமங்கலம், ராயக்கோட்டை அமைந்துள்ளது. இதனால், ஓசூர் சுற்றுவட்டார விவசாயிகள் பூக்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் பயிரிட்டு வருகின்றனர். ஓசூரில் அதிகம் மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதே போல், ராயக்கோட்டையில் சாமந்தி பூக்களை அடுத்து காய்கறிகள் சாகுபடி பரப்பு அதிகம். கடந்த நில மாதமாக பீன்ஸ், புடலங்காய் மற்றும் சுரைக்காய் சாகுபடி செய்யப்பட்டன. தற்போது, கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
ராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த 2 மாதங்களாக கத்தரிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, ராயக்கோட்டை பகுதியில் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து, விளைச்சலான கத்தரிக்காய் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த நாட்களில் கிலோ ரூ.40 வரை விற்பனையான கத்திரிக்காய், அதிக விளைச்சலால் தற்போது கிலோ ரூ.30க்கு விற்பனையாகிறது.
