காரிமங்கலம் அருகே கார், பைக் மோதியதில் 3 முதியவர்கள் படுகாயம்

 

காரிமங்கலம், ஆக.4: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த காளப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாது(70), விவசாயி. இவர் நேற்று மாலை பைபாஸ் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே சென்ற கார், மாது மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதே போல், முள்ளனூர் பகுதியை சேர்ந்த சின்னசாமி(65), அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த முனியப்பன்(61) ஆகியோர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்த இருவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்துகள் குறித்து, காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: