பேரணாம்பட்டு, ஜூலை 24: பேரணாம்பட்டு அருகே பைக் மீது ேலாடு ஆட்டோ மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். நண்பருக்கு கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு- மேல்பட்டி செல்லும் சாலையில் உள்ள மூன்று வழிச்சாலையில் நேற்று மாலை ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்த நவீன் (30) என்பவர் லோடு ஆட்டோவை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக நண்பர்களான பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியை சேர்ந்த பிரதீப்(22), சேரன் வீதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் (21), ஓங்குப்பம் பகுதியை சேர்ந்த மணி(23) ஆகிய மூன்று பேரும் ஒரே பைக்கில் பேரணாம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த ஆட்டோவும் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரதீப், அப்துல் ரஹ்மான் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
