வேலூர், ஜூலை 18: வேலூரில் பெண் ஜிம் பயிற்சியாளருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், நிர்வாண படம் எடுத்து மிரட்டி ரூ.4.50 லட்சம் பணம் மற்றும் நகைகளை பறித்த கணவன், மனைவியை பிடித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த 30 வயதான பெண் அங்கு உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது ஜிம்மில் அதே பகுதியை சேர்ந்த பெண், உடற்பயிற்சி செய்து வந்தார். இதன் மூலம் கிடைத்த நட்பை பயன்படுத்திக் கொண்டு, பயிற்சிக்கு வந்த பெண் ஜிம் பயிற்சியாளரிடம், எனது கணவனுக்கு சரிவர வேலை இல்லாததால் குடும்பம் வறுமையில் உள்ளது. எங்களுக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதனால் பரிதாபப்பட்ட ெபண் ஜிம் பயிற்சியாளர், அந்த பெண்ணின் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். அவரை வரவேற்ற அந்த பெண்ணும், கணவன் மணிவண்ணனும், அவருக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர். இதனை குடித்ததும் மயங்கிய அந்த பெண்ணை, மணிவண்ணன் தனது படுக்கையறைக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை மணிவண்ணனின் மனைவி மொபைல் போன் மூலம் நிர்வாணமாக வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த பெண் ஜிம் பயிற்சியாளரிடம் அந்த படங்களை காட்டி இதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி அவ்வப்போது பணம் பறித்து வந்துள்ளனர்.
இவ்வாறு மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும், பெண் ஜிம் பயிற்சியாளரின் தங்க நகைகளையும் பறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் மேலும் பணத்தை வழங்க இயலாத நிைலயில் பெண் ஜிம் பயிற்சியாளர், தன்னிடம் பயிற்சிக்கு வந்து இத்தகைய மோசமான செயலில் இறங்கிய பெண்ணின் மீதும், அவரது கணவர் மணிவண்ணன் மீதும் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்களபிரியா, பெண் ஜிம் பயிற்சியாளருக்கு குளிர்பானம் கொடுத்து பலாத்காரம் செய்ததுடன், அதை ஆபாச படம் எடுத்து பணம் பறித்த கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதி தங்களை வறுமையில் இருப்பதாக கூறி பல இடங்களில் இதேபோல் பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
