பேரணாம்பட்டு அருகே பட்டா இடத்தில் சாலை அமைத்து மிரட்டுகிறார்கள்: கலெக்டரிடம் பெண் புகார்

 

வேலூர், ஜூலை 18: பேரணாம்பட்டு அருகே பட்டா இடத்தில் சாலை அமைத்து மிரட்டுவதாக கலெக்டரிடம் பெண்புகார் அளித்தார்.வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பரவக்கல் கிராமத்தைச் பெண், கலெக்டரிடம் அளித்த புகார் மனுவில், ‘பரவக்கல் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி, ஊராட்சியால் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் வெளியூரில் வசித்து வந்த காரணத்தினால், எங்களுக்கு தெரியவில்லை. பட்டா எங்கள் பெயரில் உள்ளது. பரவக்கல் கிராமத்தை இணைக்கும் சாைல ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. இருந்தும் சிலர் அராஜகமாக சாைல அமைக்க மிரட்டுகிறார்கள். பட்டா இடத்தில் சாலை அமைத்ததை ஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ‘சிலர் கோழிபண்ணை, கல்குவாரிக்கு வழிவேண்டும் என்று எங்களை அடித்து துன்புறுத்துகின்றனர். குடியாத்தம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தாசில்தாரை பார்த்தும் நடவடிக்கை இல்லை. எனவே தான் கலெக்டரை தேடி வந்துள்ளோம். எங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினோம். கலெக்டர், எஸ்பி அலுவலகத்தில் இந்த புகாரை கொடுங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தார், என்றார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர்களுடன் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

 

Related Stories: