- ரெஸ்டோ பார்
- எஸ்.டி.பி.ஐ கட்சி
- சென்னை
- மாநில பொதுச் செயலாளர்
- ஏகே கரீம்
- டாஸ்மாக்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு…
சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உணவகங்களுடன் கூடிய மதுக்கூடங்களான ‘ரெஸ்டோ பார்’ கலாச்சாரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தப் பரிசீலித்து வருவதாக வெளியாகும் செய்திகள், தமிழகத்தின் சமூகக் கட்டமைப்பையே வேரறுக்கும் ஆபத்தான நகர்வாகும். தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் பல்வேறு கொடூர குற்றச்செயல்களுக்கு முதன்மை காரணியாகவும், ஊற்றுக்கண்ணாகவும் விளங்குவது மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் தான். போதையால் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசே, குற்றச்செயல்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் மது போதையை ‘ரெஸ்டோ பார்’ என்ற பெயரில் மேலும் ஊக்குவிக்க முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருக்கும் 700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடுவதாக ஒருபுறம் அறிவித்துவிட்டு, மறுபுறம் இதுபோன்ற ‘ரெஸ்டோ பார்’ எனும் புதிய திட்டத்தைத் தீட்டுவது நேர் முரணாகும். ஒரு கையில் மதுக்கடைகளை மூடுவதாகச் சொல்லிவிட்டு, மறு கையில் நவீனக் கடைகளை திறப்பது என்ன நியாயம்?.
