×

நீ வேகமா பேசும்போதே நினைச்சேன், நீ ஏதோ செய்ய போறேன்னு…? பழநி கோயில் 100 கோடி சொத்தை பினாமில பதிஞ்சிட்டார் அமைச்சர்: மாஜி அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கடும் அட்டாக்

வாடிப்பட்டி: பழநி கோயில் 100 கோடி சொத்தை பினாமில பதிஞ்சிட்டார் அமைச்சர் ரமேஷ் என மாஜி அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
பழநிக்கு போய் மொட்டை போட்டது போயி, பழநிக்கே ஒருத்தன் மொட்டை போட்டு இருக்கிறான்னா, அது தவெக அமைச்சர் ரமேஷ். அடேய் ரமேஷ், நீ பெரிய தில்லாலங்கடி. நீ வேகமா பேசும்போதே நினைச்சேன், நீ ஏதோ செய்ய போறேன்னு…? டக்குனு அசந்த நேரத்துல பழநி கோயில் 100 கோடி ரூபாய் சொத்தை எடுத்து பினாமில பதிஞ்சிட்டான். ஆட்சிக்கு வந்து 75 நாள் கூட ஆகல. அதுக்குள்ள சிபிசிஐடி ரைடு என தமிழ்நாடு முழுவதும் பத்தி எரியுது. ஆனால் அமைச்சரோ சிறு தவறு தான் நடந்திருக்கு என கூறுகிறார். ஊழலுக்கும், தவறுக்கும் வித்தியாசம் தெரியாம பேசக்கூடாது.

கேரள நடிகர் ஒருத்தர் பேசுறாரு… நான் முதலமைச்சராக வருகிறபோது என்னோடு நடித்த அந்த நடிகை நல்லா சேலை கட்டி வந்து முன்வரிசையிலே உட்கார்ந்து கண்கலங்கி அந்த காட்சியை பார்க்க வேண்டும் என்கிறார். நையாண்டி தோரணையில் அவர் பேசியிருந்தாலும், இது விஜய் முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவை நையாண்டி, நக்கல் செய்ததாக எண்ணி நாம் கடந்து போக விட முடியாது. ஒட்டுமொத்த தமிழினத்திற்கே தலைகுனிவு இது. ஏன்னா அந்த விழாவுல குடும்பத்தில் இருக்கிறவங்க வந்து முன் வரிசையிலே உட்கார்ந்து வாழ்த்து சொல்லி இருந்தாங்கன்னா, கேரள நடிகர் இன்றைக்கு நம்மளை கேலி பேசியிருக்க மாட்டார். இந்த தமிழ்நாட்டுக்கு ஏன் தலைகுனிவை ஏற்படுத்தி தருகிறீர்கள்?. இவ்வாறு பேசினார்.

விஜய்யை முடிச்சு விட்டுத்தான் அண்ணன் வைகோ வருவாரு…
ஆர்பி.உதயகுமார் மேலும் கூறுகையில், ‘‘தவெக கூட்டணிக்கு எங்க அண்ணன் வைகோ போயிட்டாருல… இனி நமக்கு கவலையே இல்லை. விஜய்யை முடிக்காம வரமாட்டார். முடிச்சுட்டுத்தான் வருவார். அவர், அதிமுக மற்றும் திமுகவோடு நான் கூட்டணி வச்சது நான் செஞ்ச ரெண்டு தப்புன்னு சொல்றார். விஜய் அவர்களே… எச்சரிக்கையா இருங்க. நீங்க வாழ்க்கையிலே செஞ்ச மிகப்பெரிய தப்பு இந்த வைகோவை, தவெக கூட்டணியிலே சேர்த்தது தான். அவர் உங்களை முடிக்காம விடவே மாட்டார். இப்படித்தான் விஜயகாந்தை முடித்தார்’’ என்றார்.

Tags : Minister ,Palani temple ,Former Minister ,RB.Udayakumar ,Vadippati ,Ramesh ,AIADMK ,Samayanallur ,Madurai district ,Udayakumar… ,
× RELATED திமுக சட்டமன்ற உறுப்பினர்...