- திருமாலவன்
- இராசிபுரம்
- விடுதலை சிறுத்தை கட்சி
- செந்தமங்கலம் பிரிவு வீதி
- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம்
- துணை ஜனாதிபதி
- திருமவளவன் எம்பி
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில், மறைந்த நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பங்கேற்று, மறைந்த நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு ரூ.7.50 லட்சம் மதிப்பிலான நிதியுதவி வழங்கினார்.
அப்போது திருமாவளவன் பேசுகையில், “கட்சியினர் வழங்கிய ரூ.7.50 லட்சம் நிதியில் இருந்து, மறைந்த மாவட்ட செயலாளர் மகேந்திரனின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், நகர பொருளாளர் விஜயகுமார் குடும்பத்திற்கு ரூ.1.75 லட்சமும், நகர துணை செயலாளர் விஜயகுமார் குடும்பத்திற்கு ரூ.1.75 லட்சமும் வழங்கப்படுகிறது. திருப்பூரில் நடைபெற உள்ள மண்டல கூட்டத்தில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும்’’ என்றார்.
முன்னதாக மேடைக்கு வந்த திருமாவளவன் மேடையில் நிர்வாகிகள் குழுமியிருந்ததை கண்டு அவர்களை அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், யாரும் கேட்காததால், அங்கிருந்த மைக்கை ஆவேசத்தில் உடைத்தெறிந்தார். யார் சொன்னால்தான் நீங்கள் கேட்பீர்கள், நான் சொன்னால் கூட கேட்க மாட்டீர்களா என பேசியும் நிர்வாகிகள் இருக்கையில் அமரவில்லை. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
