×

ஆட்சியில் பங்கேற்க மாட்டோம்: மார்க்சிஸ்ட் செயலாளர் உறுதி

திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திருவாரூரில் நேற்று அளித்த பேட்டி:
தமிழக இடைதேர்தல்களில் இடதுசாரிகள் தனி அணியாக செயல்படுவதென தீர்மானித்துள்ளோம். அரசியல் சூழலை பொறுத்து அப்போது தான் முடிவெடிப்போம். கர்நாடகா தண்ணீர் திறந்துவிடாத நிலையிலும், ஏற்கனவே பற்றாக்குறை தண்ணீர் பகிர்வு குறித்து உச்சநீமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அந்த முறையில் தமிழகத்திற்கான தண்ணீரை பெற தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையமும் தண்ணீர் பெற்று தர ஆவண செய்ய வேண்டும். தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு என்பதை தெளிவாக தெரிவித்துள்ளோம். தவெக ஆட்சியில் செல்வாக்கை செலுத்துகிற அளவிற்கு எங்களிடம் பலமில்லை. அதனால் எக்காரணம் கொண்டும் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம். இவ்வாறு கூறினார்.

Tags : MARXIST SECRETARY ASSURES ,THIRUVARUR ,MARXIST COMMUNIST PARTY STATE SECRETARY ,SANMUGAM ,Karnataka ,
× RELATED இடைத்தேர்தலில் தனி அணி மார்க்சிஸ்ட் சண்முகம் தகவல்