- ஈரோடு
- ஈரோடு மாவட்டம்
- ஆரம்ப சுகாதார மையங்கள்
- துணை சுகாதார மையங்கள்
- மருத்துவ கல்லூரி மருத்துவமனை
- அங்கன்வாடி மையங்கள்
ஈரோடு, ஜூன் 29: ஈரோடு மாவட்டத்தில் 1,385 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற்றன. மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகளில் சுகாதார துறையுடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல வளர்ச்சி திட்டம், சமூக நலத்துறை, வருவாய் துறை, இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம்,
இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றனர். பெற்றோர்கள் தங்களின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள முகாம்களுக்கு அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர். இந்தியா போன்ற நாடுகளில் கணவன், மனைவி உறவு என்பது போற்றுதலுக்குரியது என்றும், உன்னதமானது என்றும் பலரும் போற்றி இந்தியாவை உலக அரங்கில் மரியாதையுடன் பார்த்து வந்தனர். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து நாம் வெளியேறி வருகிறோம். குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளில் செல்போன் மற்றும் இன்டர்நெட், சமூக ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சியால் நாம் எண்ணிப் பர்க்க முடியாத அளவிற்கு சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.
