×

கொடுமுடி பஸ் நிலையம் அருகே தீ விபத்து

 

கொடுமுடி,ஜூலை6: கொடுமுடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பகுதியில் வளர்ந்திருந்த சம்பு செடிகளில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.தீ விபத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக கொடுமுடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் துரிதமாக கட்டுப்படுத்தி முழுமையாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் உயிர் சேதமோ, பெரிய அளவிலான பொருட்சேதமோ ஏற்படவில்லை. கொடுமுடி பகுதியில் அடிக்கடி சம்பு செடிகளில் தீ விபத்து ஏற்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : Kodumudi ,Kodumudi fire department… ,
× RELATED பத்தாண்டு கால போராட்டத்திற்கு தீர்வு:...