ஈரோடு, ஜூன் 29: ஈரோடு அடுத்த அம்பேத்கர் நகர் அருகே மின் கம்பியில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுவதால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஈரோடு அடுத்த அம்பேத்கர் நகரில் இருந்து மரவபாளையம் செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகே மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த கம்பத்தில் செல்லும் மின் கம்பியில் செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து காணப்படுகின்றன.
மேலும் மின் கம்பமே தெரியாத அளவுக்கு செடி, கொடிகள் முழுமையாக ஆக்கிரமித்து உள்ளன. மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின் கம்பியில் படர்ந்து உள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
