நெல்லை, ஜன.22: மக்கள் நம்மோடு உள்ளனர். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுகவுக்கு வெற்றி உறுதி என பாளையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு பாளை பகுதி திமுக சார்பில் ஜோதிபுரம் திடலில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட வழக்கறிஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் அருள் மாணிக்கம் தலைமை வகித்தார். வர்த்தக அணி துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜேஷ் வரவேற்றார்.
நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், மாநில சட்டத்துறை இணை செயலாளர் சூர்யா வெற்றி கொண்டான், நெல்லை மாநகர திமுக செயலாளர் சு.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், தொகுதி பார்வையாளர்கள் பாளை வசந்தம் ஜெயக்குமார், நெல்லை முத்துச்செல்வி, மாநில சட்ட திட்ட குழு உறுப்பினர் சுப.சீதாராமன் ஆகியோர் பேசினர்.
