களக்காடு யூனியன் கலுங்கடியில் ₹13.90 லட்சத்தில் தரைத்தள நீர்த்தேக்க தொட்டி

 

நெல்லை, ஜன.22: களக்காடு யூனியன் கலுங்கடியில் ரூபாய் 13.90 லட்சத்தில் தரைத் தள நீர்த்தேக்க தொட்டி அமைக்க நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் அடிக்கல் நாட்டினார். களக்காடு யூனியன் கலுங்கடியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 13.90 லட்சம் மதிப்பீட்டில் தரை தள நீர்த்தேக்க தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் அமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து சூரங்குடி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நாங்குநேரி – களக்காடு நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 6 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

Related Stories: