திருவனந்தபுரம்: கேரளத்தில் திருச்சூர் அருகே உள்ள அடுப்பூட்டி பகுதியில் பினீஷ் (40) என்பவரின் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சோதனை நடத்தியபோது சமையலறையில் அடுப்பில் இருந்த குக்கரில் இருந்து கஞ்சா வாசனை வந்தது. குக்கரை திறந்து பார்த்தபோது வெந்த சாதத்திற்குள் 400 கிராம் கஞ்சா இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் பினீஷை கைது செய்தனர்.
