பொருட்காட்சிக்கு அழைத்து சென்று சிறுமி கூட்டு பலாத்காரம் 4 சிறுவர்கள் அதிரடி கைது: திருமங்கலத்தில் கொடூரம்

திருமங்கலம்: திருமங்கலத்தில் 13 வயது சிறுமியை பொருட்காட்சிக்கு அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக 4 சிறுவர்கள் கைதாயினர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. பள்ளி படிப்பை இடையில் நிறுத்தி வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 24ம் தேதி திருமங்கலத்தில் நடந்து வரும் பொருட்காட்சிக்கு சிறுமியை, சிறுவன் அழைத்துச் சென்றார்.

உடன் அவரது நண்பர்களான 16 வயது சிறுவர்கள் இருவர், 13 வயது சிறுவன் ஒருவர் சென்றுள்ளனர். அனைவரும் பொருட்காட்சியை சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர் பொருட்காட்சிக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை 4 சிறுவர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, வீட்டிற்கு வந்த பின்பு அக்காவிடம் கூறி அழுதுள்ளார். அவர் தனது தாயிடம் கூறவே, சிறுமியின் தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து 16 வயது சிறுவர்கள் 3 பேர், 13 வயது சிறுவன் ஒருவர் என 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனை நடத்திய பின்பு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிக்கு 4 சிறுவர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘மருத்துவ பரிசோதனை முடிவில்தான் சிறுமி பாலியல்ரீதியாக மட்டும் துன்புறுத்தல் செய்யப்பட்டாரா? அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது தெரிய வரும்’’ என்றனர். இந்த சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* காதலிப்பதாக உல்லாசம் வீடியோ எடுத்து மிரட்டி சிறுமி கூட்டு பலாத்காரம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இருவரும் காதலித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதை செல்போனில் வீடியோ எடுத்து சிறுவன் தனது நண்பனுக்கு அனுப்பியுள்ளார். அவர் அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி மிரட்டியதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

அடிக்கடி சிறுமியை மிரட்டி தொந்தரவு செய்தால் அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே காதலனின் நண்பன், ஆபாச படங்களை மற்ற நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இது சிறுமியின் மாமா மகனுக்கும் கிடைத்துள்ளது. அவர் சிறுமியை திருமணம் செய்வதாக இருந்ததாம். இந்த படத்தை பார்த்து அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து பெற்றோர், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்ளும்படி காதலனிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுக்கவே சிறுமியின் தாயார் செங்கம் அனைத்து மகளிர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து 2 சிறுவர்களையும் கைது செய்து கடலூர் சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

* நள்ளிரவில் வீட்டில் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, 9ம் வகுப்பு முடித்து 10ம் வகுப்பு செல்ல உள்ளார். கடந்த 28ம் தேதி சிறுமி வீட்டில் பெற்றோருடன் தூங்கினார். நள்ளிரவில் சிறுமியை காணவில்லை. வீட்டின் மாடியில் சத்தம் கேட்கவே பெற்றோர் சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை பிடிக்க முயன்றபோது தப்பிவிட்டார்.

சிறுமியிடம் விசாரித்தபோது தப்பி ஓடிய வாலிபர் போளூர் அடுத்த சின்னபுஷ்பகிரியை சேர்ந்த தினேஷ்(20) என்றும், 2 ஆண்டுகளாக பள்ளிக்கு சென்று வரும்போது பின்தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று போட்டோ எடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தினேஷின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறி கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மீண்டும் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை மிரட்டி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பெற்றோர் பார்த்து விரட்டியபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பெற்றோர் புகாரின்படி கந்தவாசல் போலீசார் தினேஷை நேற்று பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: