×

பல்கலைகழக வேந்தர் விவகாரம் – தமிழகம் போராடி பெற்ற உரிமையை கைவிடுவதா.!! அமைச்சருக்கு விசிக கடும் கண்டனம்

சென்னை: பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூடி இருக்கும் கருத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக இருக்க வேண்டும் என்பது முந்தைய அரசின் நிலைப்பாடு என்றும், அதை தொடர வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசி இருக்கிறார். மேலும் புதிய வேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் முடிவு செய்வார் என மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சானது மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு போராடி பெற்ற ஒன்றை கைவிடுவது மட்டுமல்ல, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பது போலானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி-யான ரவிக்குமார் கூறி இருக்கிறார். இது தொடர்பான தனது சோஷியல் மீடியா பதிவில், “பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்கவேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைபாட்டைப் பின்பற்றவேண்டியதில்லை” என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும். மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் இதை முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலோடு தான் சொல்கிறாரா? என்று கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.

Tags : Tamil Nadu ,Chennai ,Liberation Leopards Party ,Tamil ,Minister ,Viswanathan ,
× RELATED இனி நமக்குள் பிரிவில்லை… இந்த எஃகு...