- சி. வி. சன்ன்முக்தா
- விழுப்புரம்
- எடப்பாடி பழனிசாமி
- சி. விதியாபாடி பழனிசாமி
- எடப்பாடி பழனிசாமி
- சன்முகா
- அத்தமுகத்
- விழுப்புரம் மாவட்ட கோலியனூர் ஒன்றிய
- வலவனூர் பரூர் நிர்வாகக் குழு சந்திப்பு தொழிற்சங்கச் செயலாளர்
விழுப்புரம்: சி.வி.சண்முகத்தை மீண்டும் அதிமுகவில் சேர்த்தால் கூண்டோடு ராஜினாமா செய்து விடுவோம் என எடப்பாடி பழனிசாமிக்கு, விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம், வளவனூர் பேரூர் அதிமுக செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த புதிய மாவட்ட செயலாளரான பசுபதி உரையாற்றினார். அவர் பேசுகையில், அதிமுகவில் பதவிக்கு ஆசைபட்ட துரோகிகள் எல்லாம் கட்சியின் தோற்றத்தை மாற்றி காட்ட நினைக்கிறார்கள். புதுசா கட்சிக்கு நான் வரவில்லை. 1996ல் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு நான் பாமக மாவட்ட செயலாளர். அப்போது சி.வி.சண்முகம், எந்த பங்க் கடையில் கவுந்து படுத்திருந்தார் என்று தெரியாது.
அப்போதெல்லாம் அவர் ஒரு ஆளேயில்லை. அதன்பிறகு விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் 20 ஆண்டு கால மன்னர் ஆட்சி நடந்திருந்தது. அவர்கள் நினைத்தது, வச்சதுதான் சட்டம். அவர்கள் மட்டும்தான் கருத்தை சொல்ல முடியும், பேச முடியும் என்பது எடப்பாடி பழனிசாமியால் மாற்றப்பட்டிருக்கிறது. நாம் ஒரு இக்கட்டான சூழலில் இருப்பதைபோல் மாயை ஏற்படுத்துகின்றனர் என்றார்.
அதைத் தொடர்ந்து வானூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சக்கரபாணி பேசும்போது, ‘சி.வி.சண்முகம் கட்சிக்கு பெரிய துரோகத்தை செய்து நடுத் தெருவில் நிற்கிறார். தற்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வாரா, அவரது பதவி பறிக்கப்படுமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். மீண்டும் கட்சியில் அவர் சேர முடியாது. சி.வி.சண்முகத்தை தவிர மற்ற எல்லோரையும் சேர்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவரை கட்சியில் மீண்டும் சேர்த்தால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிமுக கிளை செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா கடிதம் கொடுத்து விடுவோம் என்று தலைமையிடம் கூறிவிட்டேன். எனவே இனி நாம்தான் கட்சி. கட்சியை வலுப்படுத்த நாம் பணியாற்ற வேண்டும். பணம் இருப்பவன், இல்லாதவன் என்று இல்லாமல் உழைச்சவர்களுக்கு பதவி கிடைக்கும்’ என்றார்.
