பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூ. ஆர்ப்பாட்டம்

 

சீர்காழி, மே 22: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நீதி சோழன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமை வகித்தானர். மார்க்சிஸ்ட் லெனிலிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.

Related Stories: