போதை மாத்திரை விற்ற 2 ரவுடி சிக்கினர்

 

திருச்சி, மே.23: ரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி ரங்கம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மே.21ம் தேதி ரங்கம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில்வே பாலம் கீழே போதை மாத்திரைகள் விற்ற ரங்கம் கீதாபுரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி பிரவீன்குமார்(29) மற்றும் திருவானைக்காவல் திம்ராயசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன் (32) ஆகிய 2 ரவுடிகளை கைது ெசய்தனர். அவர்களிடமிருந்து 10 போதை மாத்திரைகள், ஊசிகள் மற்றும் ரூ.300 பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: