வேதாரண்யம், மே 22: கடலில் வீசும் சூறாவளி காற்று காரணமாக வேதாரண்யம் பகுதியில் 5 ஆயிரம் மீனவர்கள் 5வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லவில்லை. இதனால் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், வாணவன்மகாதேவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களில் கடலில் வீசும் சூறாவளி காற்று காரணமாக 5 நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலக்கு செல்லவில்லை. மீனவர்கள் ஐந்தாயிரம் பேர் மீன் பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து உள்ளனர்.
