புதுக்கோட்டை, மே 19: வேலைவாய்ப்பு பதிவு தொடர்பாக இடைத்தரகரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்.அருணா, தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவித கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
மேலும் மேற்சுட்டிய அனைத்து சேவைகளும் www.tnvelaivaaippu.gov.in நேரலையில் இணையதளம் வாயிலாக மனுதாரர்கள் அளவில் செய்து கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் எவரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
