அரிவாளை காட்டி போலீசை மிரட்டிய 2 வாலிபர் கைது

 

தூத்துக்குடி, ஜன. 22: தூத்துக்குடியில் அரிவாளை காட்டி போலீசாரை மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி தென்பாகம் எஸ்ஐ முத்தமிழரசன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு டிஎம்பி காலனி வண்ணார்குளம் பூங்கா அருகே ரோந்து சென்றனர். அப்ேபாது அங்கு 2 பேர் அரிவாளுடன் தகராறு செய்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், தூத்துக்குடி அண்ணா நகர் 3வது தெருவை சேர்ந்த லிங்கராஜ் மகன் பொன்ராஜ் என்ற ராக்குட்டி (25), டிஎம்பி காலனி 3வது தெருவை சேர்ந்த பூல்பாண்டி மகன் யோகேஷ்குமார் (24) என்பது தெரிய வந்தது. அப்போது இருவரும் போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: