கீரனூர் பேரூராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க வேண்டும்

புதுக்கோட்டை, மே 15: கீரனூர் பகுதியில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. விடுமுறை காலம் என்பதால் சிறுவர்கள், குழந்தைகள் விளையாடுவதற்காக வீட்டு வாசலில் விளையாடி வருகின்றனர். இது போன்று கூட்டம் கூட்டமாக நாய்கள் வருவதால் சிறுவர்கள் பதறியடித்து ஓடுகின்றனர். இதனால் சிறுவர்கள் கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகின்றது.

மேலும் இச்சாலையில் சுற்றிலும் நாய்கள் சண்டை போட்டுக் கொள்வதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் சில நாய்கள் நோய் தொற்று ஏற்பட்டு பார்ப்பதற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகத்தினர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Related Stories: