கந்தர்வகோட்டையில் இருந்து ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழாவிற்கு சிறப்பு பேருந்து

கந்தர்வகோட்டை, மே 14: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து வைணவ சமயத்தில் 108 திவ்யதேசங்களின் முதன்மையானதும் பெரியகோவில் என்று பக்தர்களாள் போற்றபடும் ரெங்கநாதர் குடிகொண்டு இருக்கும் ஸ்ரீரங்கத்திற்கும், சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கும் இப்பகுதியில் இருந்து ஏரளமான பக்தர்கள் மாலை போட்டு பாதயாத்திரையாக செல்லுவதும், பேருந்துகளில் செல்லுவதும் வழக்கம்.

இப்பகுதியில் இருந்து அதிக அளவில் மக்கள் செல்லுவதால் திருச்சி மார்க்கத்திற்கு சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கந்தர்வகோட்டை கிளை மேலாளர் சக்திவேல் அவர்களிடம் கேட்டுகொண்டனர். அதற்கு இணங்க ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

 

 

Related Stories: