கந்தர்வகோட்டையில் மீன் – நண்டு வாங்க குவிந்த மக்கள் கூட்டம்: போக்குவரத்து நெருக்கடி

கந்தர்வகோட்டை, மே 14: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் மீன் மார்க்கெட்டில் குவிந்தது. இப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை மற்றும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளி விடுமுறை என்பதாலும், பள்ளி கல்லூரிக்கு செல்லுபவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் சந்தர்ப்பதால் பெரும்பாலானோர் அசைவ உணவையே விரும்பி வருகிறார்கள்.

அன்றைய தினம் மீன்கள், நண்டு, பிராய்லர் கோழி, நாட்டு கோழி, நண்டு, காடை, போன்றவற்றை வாங்க மக்கள் கடைவீதியில் குவிந்தனர்கள். இதனால் போக்குவரத்து தடைபட்டது. மீன் மார்க்கெட்டில் கடல் மீன்களும், வளர்ப்பு மீன்களும் அதிக அளவில் வந்திருந்தன. பெரும்பாலனேர் கடல் மீன் வாங்க ஆர்வம் காட்டினார்கள். மீன்கள் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அதிவிரைவாக வெட்டி கொடுத்து வந்தனர். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்பது போல் மீன் வெட்டுபவர்கள் மிக விரைவாக அழகாக வெட்டி கொடுத்தனர்.

 

Related Stories: