கோட்டைப்பட்டினம் அருகே கொடூரம் குடிபோதையில் அண்ணனை இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற தம்பி

அறந்தாங்கி, மே 14: மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி பகுதியை சேர்ந்தவர் சேக் முகம்மது ராவுத்தர் மகன் ரகுமான்கான்(45). இவருடைய தம்பி இதிரிஸ்(40). இவர்கள் இருவரும் மீனவர்கள். இதில் இதிரிஸ் திருமணம் ஆகவில்லை. ரகுமான்கான் திருமணமாகி மனைவி விட்டு பிரிந்து கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி வீட்டில் அண்ணனும், தம்பியும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இரண்டு பேருக்கும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள். அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் இரண்டு பேரும் சண்டை போட்டு கொள்வார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இரண்டு பேரும் அதிகமாக மது அருந்தி மது போதையில் சண்டையிட்டுள்ளனர்.

இதில் வாய் தகராறு முற்றிய நிலையில் இதிரிஸ் தனது அண்னன் என்று பாராமல் இரும்பு கம்பியால் அண்ணன் ரகுமான்கானை தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தலையில் இரத்தம் கசிந்த நிலையில் ரகுமான்கான் இறந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த கோட்டைப்பட்டினம் போலீசார் அண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்த தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: