தேன்கனிக்கோட்டை, மே 14: தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது விருப்பநாயக்கன் ஏரி. இங்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதந்து. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் காமேஷ், தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில், போலீசார் விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
