அறுந்த மின்ஒயரை மிதித்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி

கிருஷ்ணகிரி, மே 7: கிருஷ்ணகிரி கந்திக்குப்பம் அருகேயுள்ள மாதனகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமுனியப்பா. இவரது மனைவி அலமேலு (68). இவர் அதே பகுதியில் உள்ள பத்மாவதி என்பவரின் நிலத்தில், கூலி வேலைக்காக நேற்று முன்தினம் சென்றார். அப்போது, அங்கு மின்சார ஒயர் அறுந்து கிடந்துள்ளது. அது தெரியாமல் அந்த ஒயரை அலமேலு மிதித்த போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்து வந்த கந்திக்குப்பம் போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: