கிருஷ்ணகிரி, மே 12: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த பில்லனுகுப்பம் சென்றாயகவுண்டன் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (60). விவசாயியான இவர், நேற்று முன்தினம், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பந்தாரப்பள்ளி மேம்பாலத்தில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த டூவீலர், சந்திரன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த குருபரப்பள்ளி போலீசார், அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
