கிருஷ்ணகிரி, மே 9: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள வளையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மகிமைதாஸ் (65). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காட்டிநாயனப்பள்ளி விஐபி நகர் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ், அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மகிமைதாஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவலறிந்து வந்த டவுன் போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
