ஏழாயிரம்பண்ணை, மே 13: வெம்பக்கோட்டை அனுமதியின்றி சரவெடி தயாரித்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கங்கர்செவல் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி தலைமையில் அதிகாரிகள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கங்கர்செவல் பகுதியில் உள்ள செவல்பட்டி அய்யனார் கோயில் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையை சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி சரவெடி தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
