தேவகோட்டை, மே 14: தேவகோட்டை 5வது வார்டு நேரு தெருவில் மின்கம்பம் ஒன்று எலும்புக் கூடாக காட்சி அளிக்கிறது. எந்த நேரமும் விழும் ஆபத்தை நோக்கி காத்திருக்கிறது. மின் கம்பத்தை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரியத்திற்கு தெரிவித்தும் மின்வாரியத்தினர் கண்டு கொள்ளவில்லை.
இதுகுறித்து சோலைராஜ் கூறுகையில், நேரு தெரு மின்கம்பம் ஆபத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. மின்கம்பம் புதிதாக மாற்ற வேண்டும் என்றால், பணியாற்றும் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் தலையிட்டு மின்கம்பத்தை லஞ்சம் இன்றி மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
