×

நிதித்தொகை பெறும் விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை, மே 14: பிரதமர் கௌரவ நிதித்தொகை பெறும் விவசாயிகள், நில உடைமைகளை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வேளாண்மைத் துறை அலுவலர்கள் கிராமங்கள் தோறும் சென்று பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெறும் விவசாயிகளை சந்தித்து நில உடைமையை பதிவு செய்யாத விவசாயிகளை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் 4ஆயிரத்து 586 விவசாயிகள் கௌரவ நிதி பெற்றும் நில உடைமைகளை பதிவு செய்யாமல் உள்ளனர்.

நில உடைமைகள் பதிவு செய்து வழங்கப்படும் உழவர் அடையாள அட்டை மூலம் மானியங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஒற்றை சாளர முறையில் பெறலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இ.சேவை மையம் அல்லது வேளாண்மைத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். எனவே, பிரதமரின் கௌரவ நிதித்தொகை பெறும் விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Sivaganga ,Collector ,Porkodi ,Agriculture Department ,
× RELATED கோவில்பட்டி அருகே மாட்டுவண்டி பந்தயம்