- சகுபுரம் கமலாவதி பள்ளி
- சிபிஎஸ்இ
- ஆறுமுகநேரி
- சகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி
- மேல்நிலைக்கல்வி மத்திய வாரியம்
- சகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி…
ஆறுமுகநேரி, மே 14: சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று மதியம் வெளியானது. இதில் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி அமிர்தவர்ஷினி 480 மதிப்பெண் எடுத்து முதலிடத்தையும், மாணவி ஹாசினி 470 மதிப்பெண் பெற்று 2வது இடத்தையும், மாணவி அப்ரின் நிஷா 469 மதிப்பெண் எடுத்து 3வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மேலும் தேர்வு எழுதிய 87 மாணவர்களில் 9 பேர், 450 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 26 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவ- மாணவியரையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளி டிரஸ்டிகளும் டிசிடபிள்யூ மூத்த செயல் உதவித் தலைவருமான ஸ்ரீனிவாசன், மூத்த பொதுமேலாளர் ராமச்சந்திரன், பள்ளி ஆலோசகர் உஷாகணேஷ், அட்மினிஸ்ட்ரேட்டர் மதன், முதல்வர் ஸ்டீபன் பாலாசீர், துணை முதல்வர் சுப்புரத்தினா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
