×

சிறுமியிடம் அத்துமீறல் 4 பேர் கைது

சிவகாசி, மே 13: சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, தனது உறவினர் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஆனந்தகுமார் (26) என்பவர் சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

இதனை தட்டி கேட்ட போது அவருக்கு ஆதரவாக பவுன்ராஜ் (28), பாக்கியராஜ் (30), காளிராஜ் (28) ஆகியோர் வந்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தந்தை சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படும் ஆனந்தகுமார் உள்பட 4 பேரைக் கைது செய்தனர்.

 

Tags : Sivakasi ,Anandakumar ,
× RELATED கிணற்றில் விழுந்த மான் மீட்பு