சிவகாசி தொகுதியில் வெற்றிபெற்ற அமைச்சர் கீர்த்தனாவிற்கு வாழ்த்து

சிவகாசி, மே 13: சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்த கீர்த்தனாவை, தொழிலதிபர் லெனின்கிருஷ்ண மூர்த்தி நேற்று நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட இளம்பெண் வேட்பாளர் கீர்த்தனா. இவர், காங்கிரஸ் எம்எல்ஏ அசோகனை விட 11,670 வாக்குகள் வித்தியாசத்தில வெற்றி பெற்றார்.

இதனையடுத்து கீர்த்தனா தமிழக அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். இதனால் சிவகாசி தொகுதி மக்கள் அவருக்கு நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் கீர்த்தனாவை சிவகாசி தொழில் அதிபர் லெனின் கிருஷ்ணமூர்த்தி நேற்று நேரடியாக சந்தித்து சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார். சிவகாசி தொகுதியில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

Related Stories: